மாவட்ட செய்திகள்

சாத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

சாத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சாத்தூர்,

சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் மொத்த விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டியில் உள்ள குடோனில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இருக்கன்குடி போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினார்கள். சோதனையில் நென்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டனுக்கு(வயது 31) சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சரவணமணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு