மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் 11 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு யூனியனிலும் கிராம பஞ்சாயத்துகள் தோறும் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

நெல்லை பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழப்பாட்டம் பஞ்சாயத்து பகுதியில் பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக தேசிய ஊரக தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்துக்கே சுகாதார பணியாளர்கள் நடமாடும் வாகனத்தில் சென்றனர். அங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தேசிய ஊரக தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்