மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். முருகன் நேற்று சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்