மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருகே; குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் என்ற சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை தாலுகா மாயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடகக இருப்பதாக ஹலோ திருவண்ணாமலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்தது.

பெண்களுக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் செய்வது குற்றமாகும். இந்த தகவலை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் அறிவுரையின்படி திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான குழு சிறுமியை மீட்க அமைக்கப்பட்டது.

அதே நேரத்தில் சமூக நலத்துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஊரக நலத்துறை அலுவலர் (பெண்கள்) மற்றும் குழந்தைகள் உதவி மைய உறுப்பினர், திருவண்ணாமலை தாலுகா போலீசார் ஆகியோர் மாயன்குளம் கிராமத்திற்கு விரந்தனர்.

அவர்கள் 17 வயது சிறுமியின் திருமணத்தை தடுதது அநத சிறுமியை மீட்டு திருவண்ணாமலை, பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு