மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே அணிலின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா - தொழிலாளி லாவகமாக அகற்றினார்

திருவாரூர் அருகே அணிலின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை தொழிலாளி லாவகமாக அகற்றினார்.

தினத்தந்தி

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பெருமாள் கோவில் அருகே ஒரு அணில் தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் அங்கும், இங்கும் வலியுடன் அலைந்து கொண்டிருந்தது.

இதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து அதன் தலையில் சிக்கிய டப்பாவை அகற்ற முயன்றார். ஆனால் அணில் அங்கும், இங்கும் அலைந்துகொண்டு இருந்ததால் அதை பிடிக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற சிலரின் உதவியுடன் முருகானந்தம் அணிலை பிடித்தார்.

இதைத்தொடர்ந்து அணிலின் தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை லாவகமாக அகற்றினார். பின்னர் மயக்க நிலையில் இருந்த அணிலுக்கு தண்ணீர் கொடுத்து அதன் மயக்கத்தை தெளியவைத்தார். உடனே அணில் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது. மனிதநேயத்துடன் அணிலின் உயிரை காப்பாற்றிய முருகானந்தத்தை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்