மாவட்ட செய்திகள்

கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பிற மாவட்ட வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதி

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பிற மாவட்ட வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், ஜெயராமன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று இருந்த அனைவரும் குணமான நிலையிலும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, இனிமேல் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். எனவே ஈரோடு மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.

அனைத்து நுழைவு வாயில்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச்சாவடி வழியாக நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா? அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்கள் வருகிறார்களா? என்று சோதனை செய்த பின்னரே வாகனங்கள் தொடர்ந்து உள்ளே வர முடியும். அதுமட்டுமின்றி லாரி உள்ளிட்ட அனைத்து வாகன டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை அங்கேயே செய்யப்படுகிறது. அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?