மாவட்ட செய்திகள்

சார்-பதிவாளர் அலுவலகங்கள் இயங்க அனுமதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கி, ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பயனாக மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அந்த ஊரடங்கு அதே மாதம் 24-ந் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதன. அந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்ததன.

இந்த நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் அதாவது வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் இயங்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, கர்நாடகத்தில் மாவட்ட பதிவாளர். அலுவலகங்கள் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்