திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சாங்காரணை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தினத்தந்தி
பெரியபாளையம்,
இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.