மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேப்பம்பட்டு அயத்தூர் கிராமம், மேட்டு காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் சாலையில் நின்று கொண்டு கத்தியால் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்