ரெயில் சேத்துப்பட்டு-எழும்பூர் ரெயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்த போது, படியில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் மோகன், தீடீரென கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாலினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.