மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மழை வேண்டி வருண ஜெபம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்,

நாட்டில் வறட்சி நீங்கி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டியும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடவும், ஏரி, குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் நிரம்பி வழியவும், மரம், செடி, கொடிகள் தழைத்தோங்கவும், குறை ஏதும் இல்லாமல் உயிர்கள் வாழ வேண்டியும் அகில பாரதீய துறவியர் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நேற்று வருணஜெபம் மற்றும் பர்ஜன்ய ஹோமம், விராடபருவ பாராயணம் ஆகியவை நடைபெற்றன.

அம்மாமண்டபம் படித்துறையில் இருந்த தொட்டியில் சிதம்பரம் யாகப்பா தீட்சிதர் தலைமையில் கழுத்தளவு நீரில் மூழ்கியபடி தீட்சிதர்கள் வருண ஜெபம் செய்தனர்.

ஜீயர்

இதில் ராஜமன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் சுவாமி ராமானந்தா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் ஜெயராமன், கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் துறவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?