மாவட்ட செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,524 பேருக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரியில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,524 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வழங்கினார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்கும் 95 தனியார் நிறுவனங்களும், திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் 10 தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் தொடங்க அரசு அளிக்கும் மானிய கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,950 பேர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோனிஷா, சுந்தரம், மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்னாபால முருகன் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்கள்.

இந்த விழாவில் 1,524 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசியதாவது:-

படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 1,559 பேர் தனியார் துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இந்த முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பணிக்கு தேர்வாகி உள்ளனர். தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்கள் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

விருப்பமுள்ளவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் மானியக்கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் மகேந்திரன், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்