மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா

கோவில்பட்டி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் மாலை 5 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி விழாவை யொட்டி கணபதி பூஜை, சங்கல்பம், ஸ்தபன கும்பகலச பூஜை, யாக சாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர. ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நவக்கிரகத்திலுள்ள ராகு, கேதுவுக்கு மஞ்சள், பால், தேன் பன்னீர், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி