மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் 4 குழந்தைகளுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள்தானத்தின் மூலம் 4 குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர்.

தினத்தந்தி

மும்பை,

புனேயை சேர்ந்த யுவான் பிரபு என்ற 2 வயது சிறுவன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தான். பெற்றோர் அவனை சிகிச்சைக்காக மும்பை மெரின்லைனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் அவனுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை.

இந்த நிலையில் சிறுவன் யுவான் பிரபுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை கேட்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். இதையடுத்து, அவனது இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல் தானேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகங்கள் மும்பையில் உள்ள இருவேறு ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சிறுவனின் கண்கள் பரேலில் உள்ள கண் வங்கிக்கு அனுப்பப்பட்டது.

இதில் சிறுவனின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை குழந்தைகளுக்கே பொருத்தப்பட்டன. இதன் மூலம் 4 குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர். 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு