ஸ்ரீமுஷ்ணம்,
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடி தாமரை ஏரி முதல்-அமைச்சசரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு விருத்தாசலம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணி மோகன் தலைமை தாங்கினார். பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.முருகுமாறன் கலந்து கொண்டு குடிமராமத்து திட்ட பணியை தொடங்கி வைத்தார்.