மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

விபத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பொன்னேரி அருகே மாதவரம் முஸ்லிம் நகரில் வசித்து வந்தவர் ஆபித் (வயது 20). இவரது நண்பர் முனீர் (21). இவர்கள் இருவரும் ஜனப்பன் சந்திரன் கூட்டு சாலையில் உள்ள கறி கடையில் வேலை செய்து விட்டு, 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பொன்னேரி நெடுஞ்சாலையில் மாதவரம் அருகே வந்தபோது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஆபித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முனீர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் பலியான ஆபித்தின் உடலை பொன்னேரி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்து குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, உறவினர்கள் நேற்று மாதவரம் முஸ்லிம் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு