மாவட்ட செய்திகள்

ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நிவாரண திட்டம்; மராட்டிய சட்டசபையில் கவர்னர் உரை

மராட்டிய சட்டசபை இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று மராத்தி மொழியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தினத்தந்தி

மும்பை,

மகாத்மா ஜோதிராவ் புலே பயிர்க்கடன் திட்டத்தின்படி ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு நிவாரண திட்டத்தை அரசு இறுதி செய்து வருகிறது. மேலும் பயிர்க்கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசு விரைவில் அறிவிக்கும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு அறிவிக்கும். இதன்மூலம் பல்வேறு தரப்பு மக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்