மாவட்ட செய்திகள்

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மூதாட்டி தவறவிட்ட ரூ.2½ லட்சம் நகை-வெளிநாட்டு பணம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பரிதா பேகம் (வயது 60). இவர் பெங்களூரு செல்வதற்காக குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

தினத்தந்தி

பெங்களூரு செல்லும் லாக்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததும் அனைவரும் தங்களது உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்ற போதுதான் பரிதா பேகம் தன்னுடைய உடைமைகள் இருந்த 3 பைகளை பெரம்பூர் ரெயில் நிலையத்திலேயே மறந்து வைத்துவிட்டு ஏறியது தெரியவந்தது. இதையடுத்து சக பயணிகள் உதவியுடன் பரிதா பேகம் மூர்மார்க்கெட் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே, போலீசார் பெரம்பூர் ரெயில் நிலையம் விரைந்து அங்கு கேட்பாரற்று கிடந்த 3 பைகளையும் மீட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 800 மதிப்பிலான 7 பவுன் நகை, ரூ.1,830 மற்றும் ரூ.3 ஆயிரத்து 689 மதிப்பிலான சவுதி அரேபியா ரியால் உள்பட ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 319 மதிப்பிலான பொருட்கள் இருந்தன. இதையடுத்து பரிதா பேகத்தின் சொந்த ஊரில் வசிக்கும் அவரது பேரனை வரவழைத்து உடைமைகளை போலீசார் ஒப்படைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு