மாவட்ட செய்திகள்

அரசு பஸ் டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.40 ஆயிரம் திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து நூதனமுறையில் ரூ.40 ஆயிரத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பூண்டுவெளியை சேர்ந்தவர் காத்தையன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 37). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். ரமேஷ் திருத்துறைப்பூண்டி கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 17-ந் தேதி இவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் தான் கனரா வங்கி தலைமையகத்தில் இருந்து பேசுவதாகவும் ரமேசின் ஏடி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும். எனவே கார்டின் பின் பகுதியில் உள்ள நம்பரை கொடுங்கள் என கேட்டார்.

இதை நம்பிய ரமேஷ் நம்பரை கூறினார். ரமேஷ் எண்ணை கூறிய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து

ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு