மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா சிக்கியது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு ரெயில் நிலையம் வந்த விரைவு ரெயிலை சோதனை செய்தனர். அப்போது 4 பைகள் இருந்தன. பைகளை திறந்து பார்த்தபோது அந்த பைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்புபடை அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனையில் ஈடுபட்டபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட கஞ்சா என்பது தெரியவந்தது ரெயிலில் கடத்தி வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் கஞ்சாவை ரெயிலில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து எடுத்து வந்து யாருக்கு விற்பனை செய்கிறார்கள்? என தெரியவில்லை. கஞ்சாவை காஞ்சீபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு