திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை நடத்தினர்.
அப்போது ஊரடங்கை மீறி திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் 2 மளிகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.
மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கினர்.
இதையடுத்து அந்த 2 மளிகை கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.