மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பாவேந்தர் சாலை, கம்பர் சலை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்