மாவட்ட செய்திகள்

பா.ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவாருக்கு கொரோனா

மராட்டிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய பாரதீய ஜனதா மூத்த தலைவராக இருந்து வருபவர் சுதீர் முங்கண்டிவார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை மாலை எனக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான 58 வயது சுதீர் முங்கண்டிவார் பல்லர்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அவர் நிதி மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு