மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் 91 பேர் காலம் காலமாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட 91 பேரும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து தலைமைச்செயலகத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மேற்கண்ட 91 பேரும் தங்களுக்கு கால தாமதம் செய்யாமல் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் களாம்பாக்கம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் வீட்டுமனை பட்டா கொடுக்காமல் வீட்டுமனை பட்டா வழங்கியதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராடிவரும் தங்களுக்கு இதுநாள் வரையிலும் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்தும், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்யும் அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு