மாவட்ட செய்திகள்

செம்மரம் வெட்ட சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது

ஜமுனாமரத்தூரில் செம்மரம் வெட்ட சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜமுனாமரத்தூர்,

ஜமுனாமரத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜமுனாமரத்தூர் கூரப்பட்டு ரோடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் எலவந்தபுதூர் கிராமத்தை சேர்ந்த கணேசன், பெரிய மச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு, மேல் விளாமுச்சி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, கல்யாண மந்தை பகுதியை சேர்ந்த குப்புசாமி, சத்யராஜ், ஏழுமலை ஆகியோர் என்பதும், ஆந்திராவுக்கு சென்று செம்மரம் வெட்ட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை