மாவட்ட செய்திகள்

விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்

மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தினத்தந்தி

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்பேரில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 1.4.2003 முதல் 31.3.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்து புதிய விவசாய மின் இணைப்பு வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மறைமலைநகர் செயற்பொறியாளர் ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார்.

உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், பார்த்திபன், ரவிச்சந்திரன், பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்துகொண்ட விவசாயிகள் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், புதிய மின் இணைப்பு கோரி மனுக்களை அளித்தனர். விவசாயிகள் அளித்த சில மனுக்கள் மீது செயற்பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆணைகளை வழங்கினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு