மாவட்ட செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள், 10 நர்சுகளுக்கு கொரோனா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி டாக்டர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பயிற்சி டாக்டர்கள் மற்றும் 10 நர்சுகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்