மாவட்ட செய்திகள்

போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

40 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

முற்றுகை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்கக்கோரி திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு டாஸ்மாக் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகி குமார் புஷ்பராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோரிக்கை மனு

இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கை மனுவை டாஸ்மாக் கிடங்கு மேலாளர் பாலாஜியிடம் அளித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு