மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள்– அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை தடைசெய்யும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஞானதாஸ், மாநில துணைச்செயலாளர் இளங்கோ, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் லெட்சுமணன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், துணைத்தலைவர் அந்தோணி, மாநில செயலாளர் ஐடாஹெலன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு