மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவானி (21) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை நெற்குன்றம் 4-வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பவானி திடீரென தனக்கு வாந்தி வருவதாகவும், வயிறு வலிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதனால் திருமுருகன், ஜூஸ் வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி பவானி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய பவானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பவானிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு