மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணம்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செம்பரம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் திருவள்ளூரை அடுத்த திருமழிசை சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு வழக்கம் போல் மோகன் வேலைக்கு சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை.

மோகனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிறுவனத்தில் மோகனின் உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து மோகனின் மகன் மூர்த்தி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு