திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன். ஒரு ஜவுளிக்கடையில் சுமை தூக்கும் வேலைக்கு சன்று வந்தான். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அவர்கள் இருந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.
அங்கு இருந்த சிறுமியை மீட்டனர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.