மாவட்ட செய்திகள்

அறச்சலூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது 50 பயணிகள் உயிர் தப்பினர்

அறச்சலூர் அருகே தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பயணிகள் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

அறச்சலூர்,

ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார். அறச்சலூர் வடபழனி அருகே ஒரு வளைவில் பஸ் திருப்ப முயன்றது.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் நிலைதடுமாறி பஸ் ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 50 பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்