மாவட்ட செய்திகள்

செம்மஞ்சேரி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் தனக்கு சொந்தமான காரில் மேலும் 3 பேருடன் நேற்று மாலை 4 மணியளவில் நூக்கம்பாளையம்-செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தினத்தந்தி

சோழிங்கநல்லூர்,

மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் தனக்கு சொந்தமான காரில் மேலும் 3 பேருடன் நேற்று மாலை 4 மணியளவில் நூக்கம்பாளையம்-செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்டு காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுமையாக எரிந்தது.

காரில் வந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர். தகவலறிந்த சிறுசேரி தீயணைப்புத்துறை அதிகாரி மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

நல்லவேளையாக காரில் இருந்து அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். சாலையில் வந்த கார் திடீரென தீப்பற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு