மாவட்ட செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பாதிரியார் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடற்கரை கிராமத்தில் மணல் எடுப்பது தொடர்பாக சின்னவிளை, முட்டம் பகுதி மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அவர்கள் கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். மீன்பிடி உபகரணங்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், படகுகள், வலைகள் போன்றவை சேதமடைந்தன.

இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த அந்தோணி அடிமை, மற்றொரு தரப்பை சேர்ந்த அமலோற்பவம் ஆகியோர் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் சின்னவிளை பாதிரியார் ஆன்டனி கிளாரட் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு