மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தல் நடைபெற்ற 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு

பால்கர், பண்டாரா-கோண்டியா ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மும்பை,

பா.ஜனதாவை சேர்ந்த பால்கர் தொகுதி எம்.பி.யான சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பண்டாரா-கோண்டியா தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே கடந்த ஆண்டு பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் விலகி காங்கிரசில் இணைந்தார்.

இதையடுத்து காலியான மேற்கண்ட இரு தொகுதி களுக்கும் நேற்று இடைத் தேர்தல் நடை பெற்றது. பால்கரில் பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் உள்பட 7 வேட் பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

சிவசேனா சார்பில் மறைந்த சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா போட்டியில் உள்ளார். பா.ஜனதா கட்சி முன்னாள் காங்கிரஸ் தலை வர் ராஜேந்திர காவித்தை முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக தாமு ஷிங்டே களத்தில் உள்ளார்.

இதேபோல பண்டாரா-கோண்டியாவில் பா.ஜனதா வின் ஹேமந்த் பட்லே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த மதுக்கர் குக்டே உள்பட 18 பேர்

போட்டியிடுகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி