மாவட்ட செய்திகள்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும்; சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேட்டி

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம்(அக்டோபர்) மாதம் 14-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடத்துவது என்று முன்பு மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே அதாவது 10-ந் தேதி கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் மட்டுமே இந்த தொடர் நடத்தப்படும்.

இதில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். பிறகு அவற்றுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படும்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்