லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடித்ததும் வழக்குகள் மீது மேல்முறையீடு கிடையாது. கோர்ட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் வருகிற 9-ந்தேதி வரை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகளை சமரசம் பேசி முடிக்க அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்குகளை விரைவாக மற்றும் சுமுகமாக முடித்து கொள்ள விரும்புவோர் அவரவர் வழக்குகள் நடைபெறும் கோர்ட்டிலோ அல்லது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தையும் உடனடியாக அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மீனாட்சி தெரிவித்துள்ளார்.