மாவட்ட செய்திகள்

கலவை அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை

கலவை அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை.

தினத்தந்தி

கலவை,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் மாம்பாக்கம், சென்னசமுத்திரம், வெள்ளம்பி ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உள்ளன. இங்கு, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை கலவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பலத்த பெய்தது. அதில் மாம்பாக்கத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் கோவில் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த நெல் மூட்டைகள் எடை போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று பெய்த திடீர் மழையால் அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்