மாவட்ட செய்திகள்

தாராவியில் குடிசை வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது

தாராவியில் குடிசை வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இதில் லேசான காயத்துடன் 5 பேர் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை தாராவி 60 அடி சாலை இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டின் மேல்தளத்தின் சுவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மேற்கூரையும் சரிந்தது.

அப்போது, மேல்தளத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் வெளியே வர முடியாமல் உதவிகேட்டு அலறினார்கள்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றினர். இதில், மேல்தளத்தில் இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களாக மும்பையில் கொட்டிய கனமழையின் காரணமாக அந்த குடிசை வீட்டின் மேல்தளத்தின் சுவர் உறுதிதன்மை இழந்து இருந்து உள்ளது. இதன் காரணமாகவே அது இடிந்து விழுந்தது தெரியவந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்