மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து தச்சுத் தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தச்சுத் தொழிலாளி பலி

தினத்தந்தி

கமுதி,மார்ச்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 32). தச்சுத் தொழிலாளி. கமுதி அருகே உள்ள செய்யாமங்கலத்தில் பழைய ஓட்டு வீடு ஒன்றை இடிக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாண்டி சுவர் மீது நின்று ஓடுகளை பிரித்து கொண்டிருந்தார். சுவர் இடிந்து விழுவது போல் இருந்ததால், உடனடியாக கீழே குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக இடிந்த சுவர் அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராஜபாண்டி மயங்கி விட்டார். உடனடியாக அவரை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மலர்விழி அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்