பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். சிக்குமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் மாசாணி (வயது 5). கோயம்பேட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட்டிற்கு கொண்டு செல்லும் பணிக்காக குன்றத்தூர் போரூர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை கொல்லச்சேரி பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரத்தின் ஒரு பகுதி மோகனின் வீட்டின் சுவர் மீது பட்டது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாசாணி மீது சுவர் இடிந்து விழுந்தது.