மாவட்ட செய்திகள்

டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 5 வாலிபர்கள் கைது

டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில், வாலிபர்கள் மத்தியில் செல்போனில் டிக்-டாக் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. சுமார் 15 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் கானா பாட்டு பாடியபடி, கையில் கத்தியை காட்டி மிரட்டுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது. வாட்ஸ்அப்பிலும் இந்த வீடியோ வேகமாக பரவியது.

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை பதிவிட்ட கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 19), சுரேஷ்(23), நிஷாந்த்(19), கிருஷ்ணகுமார்(19) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் மீது ஏற்கனவே தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சிறிய குற்ற வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்