மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் நாளை முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் - அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்

விழுப்புரத்தில் நாளை முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?