மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே கலப்பட ஆயில் தயாரித்த ஆலை கண்டுபிடிப்பு 2 பேர் கைது

மதுராந்தகம் அருகே கலப்பட ஆயில் தயாரித்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட ஆயில் தயாரிப்பதாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் தனிப்படையினர் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான் புரத்தில் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆயில் கலப்படமாக தயாரிக்கும் ஆலை கண்டு பிடிக்கப்பட்டது.

கைது

அங்கு பணிபுரிந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த திருவள்ளுவன் (வயது 48), பரமக்குடியை சேர்ந்த தங்கசாமி (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது..

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு