மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேப்பூர் வி.ஏ.ஓ. சதீஷ்குமாரிடம் விண்ணப்பித்திருந்தார்.

தினத்தந்தி

அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணன், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்தார். வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நாராயணனிடம் கொடுத்து, அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மறைந்து இருந்தனர்.

அப்போது நாராயணன், ரசாயன பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக வி.ஏ.ஓ. சதீஷ்குமாரிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்