மாவட்ட செய்திகள்

சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கன்டெய்னர் லாரி 5 பேர் காயம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சிக்னலில் நின்றிருந்த வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் அரசு பஸ் உள்பட 8 வாகனங்கள் சேதம் அடைந்தது. 5 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த திருமழிசை சிக்னலில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலுக்காக சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களுக்கு இடையே புகுந்தது.

அங்கிருந்த வாகனங்களை இடித்து தள்ளியபடி தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதி நின்றது. இதில் 6 கார்கள், 1 லோடு ஆட்டோ மற்றும் ஒரு அரசு பஸ் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்தன. கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்