மாவட்ட செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக புகார் அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.51 ஆயிரம் பறிமுதல்

சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்திற்கு தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார்.

அப்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக அ.தி.மு.க. நிர்வாகியான சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த நேசமணி (வயது 55) என்பவரிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு