மாவட்ட செய்திகள்

தனியாக நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு

கிண்டியில் தனியாக நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் பறித்துச்சென்று விட்டனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை கிண்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முல்லை செல்வம். இவர், அந்த பகுதி அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருடைய தாயார் பூமயில்(வயது 62). இவர், நேற்று காலை மருத்துவமனைக்கு செல்ல நேரு நகரில் தனியாக நடந்து சென்றார்.

கிண்டி காமராஜபுரம் குமரன் தெருவில் அவர் சென்றபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள், திடீரென பூமயில் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூமயில், சுதாரித்துக்கொண்டு சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்து கொள்ளையர்களுடன் போராடினார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மஆசாமிகள், பூமயிலை தாக்கி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கிண்டி நேரு நகர் பகுதி எப்போதும் ஆள்நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். அந்த பகுதியில் பட்டப்பகலில் தனியாக நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு