மாவட்ட செய்திகள்

மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற பா.ஜனதா பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது

மனைவிக்காக வாக்குசேகரிக்க சென்ற பா.ஜனதா பிரமுகரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

தினத்தந்தி

ஆனைமலை,

கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் பொன்னாலம்மன் துறை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது51). பா.ஜனதா பிரமுகர். இவருடைய மனைவி உஷாநந்தினி. இவர் காளியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து நரிக்கல்பதி பகுதிக்கு காரில் சென்று சந்திரன் பிரசாரம் செய்து வாக்குசேகரித்தார். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிமாறன் (19) பெரிய கல்லை எடுத்து கார் கண்ணாடி மீது வீசினார். இதில் அந்த காரின் முன்புற கண்ணாடி உடைந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரசாந்த் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு